Ads Top

இசை

கலைஞர்கள் தத்துவவாதிகளை விட மறைபொருளுக்கு நெருக்கமாக உள்ளனர்.

சொல்லப்போனால் உண்மையை சொல்வதற்கு இசைதான் சிறந்ததாக இருக்கிறது ஏனெனில் இசை
வார்த்தைகளின்றி பொருளோடு உள்ளது. அது அர்த்தமுள்ளது ஏனெனில் அது உன் இதயத்தில்
மணியோசையை எழுப்புகிறது. சிறந்த இசை உனக்கும் உன் இருப்புக்கும் இடையே ஒரு இலயத்தை
உருவாக்கும்.

மெளனத்தின் இசையை கேட்கும் கலைதான் தியானம்.

உள் மையத்துடன் இலயப்படுவதற்கு வெளியிலிருந்து இசை உனக்கு உதவும்.

இசை ஒரு கருவி அது புத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறந்த இசையை கேட்கும்பொழுது நீ எந்த முயற்சியுமின்றி திடீரென
மெளனத்தில் ஆழ்ந்துவிடுவாய்.

உன்னால் இசையை உருவாக்க முடியுமெனில் உருவாக்குஇ உருவாக்கமுடியாதெனில்
இசையை கேள்.

இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது.

No comments:

Powered by Blogger.